அண்மைய செய்திகள்

  
-

வரலாற்றில் முதல்முறையாக அருட்தந்தையர்கள் மீது வழக்குத் தொடர்ந்த ஆயர் இல்லம் இலங்கையில் நடந்த சம்பவம்

 கத்தோலிக்க திருச்சபையில் தங்களது உள்ளக விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆயர் தலைமையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். 


நீண்ட காலமாக உலக நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மரபுகளே பேணப்பட்டு வந்தன. 



எனினும்,  வரலாற்றில் முதன் முறையாக ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 


இது போன்ற விடயங்களுக்கான முதன்முறையாக அருட்தந்தையர்களை விசாரணைக்குட்படுத்துவதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 



மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான இரு அருட்தந்தையர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டுள்ளார்.


குறி்த்த உத்தரவானது கடந்த 01ஆம் திகதி (01.07.2024) பிறப்பிக்கப்பட்டது.



குறித்த ஆயர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் 2ம் திகதி ஆயர் தலைமையில் வணபிதாக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.



வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு | Batticaloa Bishop House Case Filed Court Summons


இதன்போது அந்த கலந்துரையாடலை திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து அதனை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக அவர்ளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆயர் இல்லத்தினால் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.



இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்து அதளை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர் என சந்தேகத்தின்பேரில் இரு அருட்தந்தையர்களிற்கு எதிராக கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேகநபர்களான இரு அருட்தந்தையர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டார்.


வழக்கு தாக்கல்

அதேவேளை ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வணபிதா ஒருவரை அவதூறாகபேசி முகநூலில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட அருட்தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.




இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அருட்தந்தை, அவதூறாகபேசி பதிவேற்றம் செய்த நபர் ஒருவருக்கு எதிராக கடந்த முதலாம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.



இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் வழக்கிற்கு முன்னிலையான எதிராளியையும் வழக்காளியையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வழக்கை ஒத்திவைத்தார்



வரலாற்றில் முதல்முறையாக அருட்தந்தையர்கள் மீது வழக்குத் தொடர்ந்த ஆயர் இல்லம் இலங்கையில் நடந்த சம்பவம் Reviewed by Author on July 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.