அண்மைய செய்திகள்

recent
-

யாழில் ஆலயத்தில் தங்க நகைகள் திருட்டு

 யாழ்ப்பாணத்தில் ஆலயத்தின் உதவி குருக்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை – புளியங்கூடல் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 28 வயதான ஆலயத்தின் உதவிக் குருக்கள் கைதாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பின்னர் 40 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரை தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது




யாழில் ஆலயத்தில் தங்க நகைகள் திருட்டு Reviewed by Author on July 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.