வவுனியாவில் மாடுகளை திருடியவர்கள் கையும் களவுமாக பிடிபட்டார்கள்
வவுனியாவில் மாட்டை கடத்திச் சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு: பொலிசாரிடம் ஒப்படைப்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்த அப் பகுதி இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சம்பவம் இன்று )07.07) மாலை இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டி நின்ற மாட்டினை திருடிச் சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் அவர்களை கட்டி வைத்து நையப்புடைத்ததுடன், வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்றுநேரம் முரண்பாடான நிலமை ஏற்பட்டிருந்தது.
எனினும் குறித்த இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் பொதுமக்களிடத்தில் உறிதியளித்த நிலையில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த இருவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கு வலியுறுத்தினார்.
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொதுமக்களால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
July 07, 2024
Rating:


No comments:
Post a Comment