அண்மைய செய்திகள்

recent
-

தரம் 5 மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் மட்டக்களப்பில் சம்பவம்





தரம் 5 ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 ஆண் மாணவர்களும், 3 பெண் மாணவர்களுமாக 6 பேர் கல்விகற்று வருகின்றனர். 


குறித்த மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்.


இதன்போது அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ளார்.  இந்நிலையில், ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.


இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.






தரம் 5 மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் மட்டக்களப்பில் சம்பவம் Reviewed by Author on August 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.