அண்மைய செய்திகள்

recent
-

கண்டி மாநகரில் பரவி வரும் காசநோய்: பிரதான தொற்று நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது

கண்டி நகர எல்லைக்குள் காசநோய் முக்கிய தொற்று நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நகர எல்லைக்குள் சுமார் 50 காசநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கண்டி மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார்.

அதன்படி, கண்டி மாநகர எல்லைக்குள் பிரதான தொற்று நோய் டெங்கு அல்ல காநநோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடிக்கடி இருமல் மற்றும் சளி, சோம்பல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக வைத்தியரிடம் சென்று தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நோய் கண்டறியப்படுவதற்கு ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகும் என்பதாலும், கண்டி நகரில் தற்போது காசநோய் பரவி வருவதாலும், மக்கள் இயன்றளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்தியர் பசன் ஜயசிங்க கூறுகிறார்.




கண்டி மாநகரில் பரவி வரும் காசநோய்: பிரதான தொற்று நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது Reviewed by Author on August 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.