பாரிஸ் பரா ஒலிம்பிக் போட்டி: இலங்கைக்கு முதல் பதக்கம்
பாரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சமிதா துலான் நேற்று (02) வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
F64 வகை ஈட்டி எறிதல் போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.
சமிதா துலான் 67.03 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்றார், இது F44 பிரிவில் அவர் வைத்திருந்த உலக சாதனையை புதுப்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
முன்னதாக, 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் F44 பிரிவில் ஈட்டி எறிதலில் சமிதா துலன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இலங்கை இராணுவத்தின் இராணுவ பொலிஸில் இணைந்த கோப்ரல் கொடித்துவக்கு, 2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஈட்டி எறிதல் F46 இல் நான்காவது இடத்தைப் பெற்றார்.
அத்துடன், இந்தோனேசியாவில் 2018 இல் நடந்த ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகள், 2019 உலக பரா விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் தெனியாய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இதேவேளை, சமிதா துலானின் வெற்றிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்ப குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment