அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்!

நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள்  திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவருகின்றன 

இதன் ஒரு கட்டமாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் இன்றைய தினம்(17)  தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட  கலந்துரையாடல்  மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டுமண்டபத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது தேர்தல் தொடர்பான ஏற்ப்பாடுகள்  தேர்தல் நாளில் முகவர்கள் ,கண்காணிப்பாளர்கள் ஊடகவியலாளர்கள், நடந்து கொள்ளவேண்டிய முறைகள் பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு  எடுத்துச்செல்லல் மீள கொண்டுவருதல் வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்புக்கள் விசேட தேவையுடையோருக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்   தொடர்பில் விரிவான தெளிவூட்டலை முல்லைத்தீவு மாவட்ட  உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.ஜெனிற்றன்  அவர்கள் வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின்  பொலிஸ் உயரதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள், கட்சி முகவர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.

விசேடமாக குறித்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர் 








முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்! Reviewed by Author on September 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.