அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தேர்தலில் போட்டியிடவில்லையா ?

முன்னாள் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்


இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


வவுனியாவில் இன்று (06.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உண்மையில் அவர் போட்டியிடுகின்றரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தான் இம்முறை போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். தற்போது போட்டியிடுவதாக செய்தி வந்ததாக கூறுகின்றீர்கள். அவ்வாறு எமக்கு தெரியாது. அவர் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.



முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தேர்தலில் போட்டியிடவில்லையா ? Reviewed by Author on October 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.