ஓமந்தையில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தற்காப்பு துப்பாக்கி சூடு: பெறுமதியான மரங்களுடன் இருவர் கைது
ஓமந்தையில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தற்காப்பு துப்பாக்கி சூடு: பெறுமதியான மரங்களுடன் இருவர் கைது
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிசாரை மோதி தள்ளி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தி, இருவரை கைது செய்துள்ளதாக ஒம்தைப் பொலிசார் தொவித்தனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுதது பாெலிஸ் நிலைய பாெறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஓமந்தையில் இருந்து மறவன்குளம் நோக்கி கடத்தப்பட்ட மரக்குத்திகளுடனான வாகனம் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டது.
இதன்போது, பொலிசாரை மோதி விட்டு மரக்குற்றிகளுடன் வாகனம் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனையடுத்து வாகனமும் அதில் இருந்த மரக்குற்றிகளும் மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாெலிசார் மேலும் தெரித்தனர்.
Reviewed by Author
on
October 15, 2024
Rating:




No comments:
Post a Comment