அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் பரவும் அபாய காய்ச்சல் பன்றி பண்ணையாளர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு பதிவு செய்து தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் கோருகிறது.

இலங்கையில் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு முதல்முறையாக ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்தே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பன்றிக்காய்ச்சல் நிலை முதலில் மேல் மாகாணத்தில் பதிவாகியதாகவும், தற்போது ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இது பதிவாகியுள்ளதாக மேல் மாகாண கால்நடை மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே. சரத் தெரிவித்துள்ளார்.




இலங்கையில் பரவும் அபாய காய்ச்சல் பன்றி பண்ணையாளர்களுக்கு எச்சரிக்கை Reviewed by Author on November 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.