வீட்டிற்குள் புகுந்த முதலை: பீதியில் மக்கள்
குளியாப்பிட்டிய - தியகலமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது.
தற்போது பெய்து வரும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக, முதலை மக்கள் குடியிருப்பு பகுதியினுள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்து குறித்த முதலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
வீட்டிற்குள் புகுந்த முதலை: பீதியில் மக்கள்
Reviewed by Author
on
November 30, 2024
Rating:

No comments:
Post a Comment