அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 74 வீத வாக்கு பதிவு-அமைதியான முறையில் தேர்தல்-மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்

 மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வியாழன்(14) 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.


-மன்னார் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 307 பேர் இன்றைய தினம் (14) வாக்களித்துள்ளனர்.தபால் மூல வாக்களிப்பையும் உள்ளடக்கிய 67 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாக்காளர்களில் 74 வீதமாக காணப்படுகின்றது.


தற்போது வாக்களிப்புகள் நிறைவு பெற்று வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.98 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வாக்கு என்னும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.இரவு 10 மணிக்கு முன்னர் முதலாவது நிலவரத்தை அறிய தர முடியும்.என அவர் தெரிவித்தார்.


-மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் வாக்களிப்புகள் 98 வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெற்றது.


-தற்போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் உள்ள 8 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் என்னப்பட உள்ளது.


வன்னி மாவட்டத்தில் 06 உறுப்பினர்களை தெரிவு செய்ய 432 வேட்பாளர்கள் போட்டியிட்மை குறிப்பிடத்தக்கது.








மன்னார் மாவட்டத்தில் 74 வீத வாக்கு பதிவு-அமைதியான முறையில் தேர்தல்-மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் Reviewed by Author on November 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.