நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை
காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.
நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை காணவில்லை
Reviewed by Author
on
November 26, 2024
Rating:

No comments:
Post a Comment