மன்னார் வேட்டையான் முறிப்பு கிராமத்தில் சிறப்பாக இடம் பெற்ற சாதனையாளர்கள் பாராட்டு விழா
சாதனையாளர்கள் பாராட்டு விழா 2024
மாந்தைமேற்க பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேட்டையாமுறிப்பு கிராமத்தில் கராத்தே போட்டியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தை பிடித்து வெங்கலபதக்கத்தினை வென்றவருக்கும் மற்றும் எறிபந்து போட்டியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினை பிடித்தவர்களுக்கும் மற்றும் பல்கலைகழகத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதம விருந்திரகான மன்னார் மாவட்ட செயலாளர் உயர்திரு.க.கனகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.டெ.கா.அரவிந்தராஜ் அவர்களும் மன்னார் மாவட்ட விவசாய உதவி ஆணையாளர் திரு.யு.மரின்குமார் அவர்களும் மேலும் மதகுருமார் பொலிஸ் பெறுப்பதிகாரி கிராமசேவையாளர் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சமூகசேவையாளர் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாராட்டினை வழங்கினர். இக்கிராமத்தில் அதிகமான குடும்பங்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். இந்நிகழ்வினை கிராமத்தை சேர்ந்த சமூகஆவர்வலர்களே தங்களது முயற்சியால் மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment