அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பில் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில்,


தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல்  விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. 


இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றேன். 


இது தமது இனத்தின் பிரச்சனைகளை சீர்தூக்கிபார்த்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்க உதவும் என்று நம்புகின்றேன். இவ்வாறான ஓர் குழுவாக பாரளுமன்றத்தில் செயற்பட உங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு வேண்டிநிற்கின்றேன் என்றுள்ளது. 




தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கோரிக்கை Reviewed by Vijithan on February 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.