அண்மைய செய்திகள்

recent
-

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து

 யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கந்தர்மடம் பகுதியில் இருந்து யாழ்.நகர பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.


இந்த விபத்தில் யாழ்.இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பயணித்த அதிகாரிகளும், காரில் பயணித்த சாரதியும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளர்.


இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.


விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து Reviewed by Vijithan on July 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.