போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார்.
1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர்.
புலிகளின்குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்டிருந்தார்.
அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவிற்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது.
நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டார்.
நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கிற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராக செயற்பட்டார்.
தேசியத் தலைவர் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராக புகழ்பெற்றிருந்தார்.

No comments:
Post a Comment