வீதி விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி!
கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் வசித்த 40 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09 ஆம் திகதி வைத்தியசாலை செல்வதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வீதி விபத்தில் இளம் குடும்பப் பெண் பலி!
Reviewed by Vijithan
on
September 13, 2025
Rating:
Reviewed by Vijithan
on
September 13, 2025
Rating:


No comments:
Post a Comment