மன்னார் நகர பிரதேச செயலாளராக கே.காந்தீபன் நியமனம்-அரச அதிபர் முன்னிலையில் கடமையை பொறுப் பேற்றார்.
மன்னார் நகர பிரதேச செயலாளராக கே.காந்தீபன் நியமிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்(1) திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் கடமையை பொறுப்பேற்றார்.
மன்னார் நகர பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட கே.காந்தீபன் 2012 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி 2013 தொடக்கம் 2017 வரை கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளராகவும், 2017 தொடக்கம் 2022 வரை முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் ,2022 தொடக்கம் 2025 வரை பதுளை உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றிய நிலையில் மன்னார் பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே.பிரதீப் உதவி மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில்,மன்னார் நகர பிரதேசச் செயலாளராக கே.காந்தீபன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment