மன அழுத்தத்தில் ஐந்தில் ஒரு பகுதி இலங்கை மக்கள்!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக இருப்பதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
உயிர்மாய்ப்புக்கு முயற்சி
ஆசியாவைப் பொறுத்தவரையில் 16.1 சதவீதமானோர் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
2023ஆம் ஆண்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 39 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களிடையே 7.0 சதவீதமானோர் உயிர்மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகவும் மற்றும் 35.0 சதவீதமானோர் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வருடந்தோறும் சுமார் 200,000 பேர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர்.
அவ்வாறு புலம்பெயரும் பெண்களில் 75 சதவீதமானோர் திருமணமானவர்கள். அதேவேளை புலம்பெயரும் பெண்களின் பிள்ளைகளுக்கே இந்த மன அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by Vijithan
on
November 25, 2025
Rating:


No comments:
Post a Comment