அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-புகையிரத வீதியில் -இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு

 இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை(23) காலை கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார்  தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த அலுவலகம்  மன்னார்-புகையிரத வீதி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் , இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.


இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளுராச்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். 










மன்னார்-புகையிரத வீதியில் -இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு Reviewed by Vijithan on November 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.