கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!
'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியமல் போயுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Vijithan
on
December 10, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 10, 2025
Rating:


No comments:
Post a Comment