கிளிநொச்சி கடற்பரப்பில் வெளிநாட்டு கஞ்சா பொதிகள்
கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல் புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப்பிரிவை பயன்படுத்தி சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
தரையிறங்க முடியாததால் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம்
கடல் பகுதியில் மிதக்கும் எட்டு (08) சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனை செய்தபோது, பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா, கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக தரையிறங்க முடியாததால் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா கையிருப்பின் மொத்த தெரு மதிப்பு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் என்று நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சியில் உள்ள ஜெயபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
Reviewed by Vijithan
on
March 17, 2026
Rating:


No comments:
Post a Comment