அண்மைய செய்திகள்

recent
-

-பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்:- நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்

 இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன்  சூரசேன  உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.


 மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர்  பிரீத்தி பத்மன்  சூரசேன  மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் செய்தார்.


 இதன் போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா,மன்னார் மாவட்ட   நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக  நீதவான்  எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும்  சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர்.


அதனைத்தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது நீதிமன்ற செயல்பாடுகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.













-பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்:- நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார் Reviewed by Vijithan on March 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.