அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக கையளிப்பு
அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) , முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ அவர்களினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(3) முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ அவர்களினால் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,மாவட்ட செயலக அதிகாரிகள் , பாஸ்டர் பத்திநாதன்,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Vijithan
on
March 03, 2026
Rating:


No comments:
Post a Comment