அண்மைய செய்திகள்

recent
-

ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு

 ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான முயற்சியாக, அந்தச் சேதங்களின் மதிப்பைக் கணக்கிட்டு வருவதாக ஐஆர்ஜிசி உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி, ஒரு முதற்கட்ட மற்றும் தோராயமான மதிப்பீட்டின்படி இந்தத் தொகை இதுவரை சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் எனத் தெரிவித்துள்ளார். 

எனினும், இது மாற்றமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடுகளைச் செய்து வருவதாக தஸ்னிம் செய்தியை மேற்கோள்காட்டி அவர் மேலும் கூறியுள்ளார். 

கடந்த வார இறுதியில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழப்பீடு கோருவது முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருந்ததாக மொஹஜெரானி கூறியுள்ளதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்ற போதிலும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு Reviewed by Vijithan on April 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.