அண்மைய செய்திகள்

recent
-

பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி.

 பார்வை  தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை  தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை   ஈஸ்வரி  என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த  கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் மகள் ஈஸ்வரி (17). 11ம்  வகுப்பு பயின்று வருகிறார்.


இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.


இந்நிலையில் நீந்துவதற்கு  பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் நீரிணை  கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.


அனுமதி கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு  படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20  பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.


திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து  ஈஸ்வரி  நீந்தத் தொடங்கி,   பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்தடைந்தார்.


தொடர்ந்து  11 மணி , 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக  கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை  ஈஸ்வரி படைத்துள்ளார்.


தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில்   பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை  20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார்.


 மேலும், சென்னை முகப்பேர் மேற்கு  பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழே  பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த  05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்தி கடந்த உள்ளது குறிப்பிடத்தக்கது.











பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி. Reviewed by Vijithan on April 07, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.