அண்மைய செய்திகள்

recent
-

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 904,855 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

இவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். அவர்களின் எண்ணிக்கை 200,796 ஆகும். அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

இதேவேளை, மே மாதம் முதலாம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 28,578 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை தெரியவருகிறது.




சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது Reviewed by Vijithan on May 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.