அண்மைய செய்திகள்

recent
-

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது

 யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர் .




கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர் .



கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற மாட்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.


சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .






யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது Reviewed by Vijithan on June 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.