தன்னைதானே சுட்டு உயிரை மாய்த பொலிஸ் அதிகாரி ; விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலபே, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிரை மாய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
மரண பரிசோதனை
சம்பவத்தை அடுத்து அவர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர், இது தொடர்பான மரண பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் இந்த மரணம் குறித்த பின்னணி மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
July 17, 2026
Rating:


No comments:
Post a Comment