அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!

 >மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும் பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல் உருவாகியுள்ளது டன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.


அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாதமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும் நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை


சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு! Reviewed by Vijithan on September 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.