மன்னாரில் அதிரடியாக 12 பேர் கைது
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தெளஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இன்று காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவலைப்பில் மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
29-04-2019 காலை தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் இடம் பெற்ற நிலையில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் எருக்கலம் பிட்டி பகுதியின் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
தடை செய்யப்பட்ட தெளஹித் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் 12 சந்தேக நபர்கள் இராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இராணுவத்தின் ஊடாக 29-04-2019 மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் தொடர்ச்சியான பாதுகாப்பு கடமை காரணமாக குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேலதிக தகவல்களை பெறும் நடவடிக்கைள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புடனான இவர்களுடைய தொடர்பு பற்றிய விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29-04-2019 காலை தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் இடம் பெற்ற நிலையில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் எருக்கலம் பிட்டி பகுதியின் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
தடை செய்யப்பட்ட தெளஹித் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் 12 சந்தேக நபர்கள் இராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இராணுவத்தின் ஊடாக 29-04-2019 மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் தொடர்ச்சியான பாதுகாப்பு கடமை காரணமாக குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேலதிக தகவல்களை பெறும் நடவடிக்கைள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புடனான இவர்களுடைய தொடர்பு பற்றிய விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் அதிரடியாக 12 பேர் கைது
Reviewed by Author
on
April 30, 2019
Rating:
No comments:
Post a Comment