அண்மைய செய்திகள்

recent
-

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரை வாகன பவனி--------

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரையிலான வாகன பவனி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் ஆரம்பமானது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பட்டில் மன்னார் மாந்தை சந்தியில் இருந்து குறித்த வாகன பவனி ஆரம்பமானது.
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணியாளர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரை ஆரம்பமான வாகன பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு தழுவிய ரீதியில் நடை முறைப் படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் கடந்த 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் யூலை மாதம் 1 ஆம் திகதி வரை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிர்ப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் இருந்து கிளிநொச்சி வரை வாகன பவனி-------- Reviewed by Author on June 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.