அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்-சைவ எழுச்சி மாநாடு மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஏற்பாட்டில்.......2019

சைவ எழுச்சி  மாநாடு மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஏற்பாட்டில் மன்னார் இந்து நிறுவனங்கள் இந்து ஆலயங்கள் அறநெறிப் பாடசாலைகள் மற்றும் சமயப் பெரியோர்கள்.பேராதரவுடன் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் அதீன முதல்வர்கள் இந்துக் குருமார்கள் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கின்ற மாபெரும் சைவ எழுச்சி மாநாடு தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 கூட்டமானது இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்வரும் மாதம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி மன்னார் நகரில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளையும் பொறுப்புகளும் ,வழங்கப்பட்டது  அடுத்த  கூட்டத்தில் முழுமையான விவரங்கள் எடுக்கப்பட்டு அந்த நிகழ்வுக்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பூரனப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மன்னாரில்-சைவ எழுச்சி மாநாடு மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஏற்பாட்டில்.......2019 Reviewed by Author on August 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.