அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' ரக போதைப்பொருள் மீட்பு---படம்


தலைமன்னார் பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான  'ஐஸ்'  ரக போதைப்பொருள் மீட்பு-

தலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 16.09.2019 காலை கடற்டையினர் மேற்கொண்ட   சோதனையின் போது ஒரு கோடி  ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' ரக போதைப் பொருளை  கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார்  1.05 கிலோ கிராம் எடையுள்ள  ஒரு கேடி ரூபாய் பெறுமதியான  'ஐஸ்' போதைப்பொருள் பொதியினையே கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரியின்  சிறப்பு சோதனையின் போது மீட்கப்பட்டதோடு    குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' ரக போதைப்பொருள் மீட்பு---படம் Reviewed by Author on August 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.