அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை இலங்கை ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் வாடும் அரசியல்  கைதிகளை நாட்டின் அசாதாரன சூழ்நிலயினை கருத்தில்  கொண்டு நல்லெண்ண மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு 
நாம் தங்களிடம் விநயமான கோரிக்கையினை முன்வைக்கின்றோம் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை  இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு  கோத்தபாய ராஜபக்ச  அவர்களுக்கு அவசர கடிதமூலம் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

 இது தொடர்பாக அவர்கள் மேலும்.தெரிவிக்கையில் தற்போது முழு நாடுமே கொரோனா வைரஸின் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. பல உயிர்கள்  உலகெல்லாம் கொரோனா covid 19 பெரும் உயிரழிவை சந்தித்திக்கொண்டும் கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கும் நேரம். பல உயிர்களை காவு கொண்டு குவித்து தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்  வேளையில் குறிப்பாக சிறைக்கைதிகள் அனைவருமே இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சமான மனநிலையுடன் அண்மைய நாட்களை கழித்து வருகின்றனர்.

 முழு உலகத்தினயே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த தாங்கள்  எடுத்து வரும் அதிதீவிர செயற்பாட்டு தொடர் சிறப்பான நடவடிக்கையினை பெருமையுடன் பாராட்டி நிற்ககின்றோம் அத்தோடு சுகாதார துறை முப்படையினரின் அர்ப்பனிப்பான பணியும் போற்றுதலுக்குரியது அதேவேளை நீண்ட காலமாக தமது குடும்பத்தினை பிரிந்து சிறையில்  வாடும் அரசியல் கைதிகள் மிகவும் உள ரீதியான மிகப் பெரும் பாதிப்போடு வாழ்ந்து வரும் இவ் வேளையில் கொடிய வைரஸ் தாக்கத்தினால் அச்சத்தில் இருக்கின்ற அவர்களின் குடும்பங்களின் நிலமையினையும் மனரீதியான பாதிப்பினையும் கருத்தில் கொண்டு பொது மன்னிப்பு வழங்கியோ அல்லது நிபந்தனை அடிப்படையிலோஅரசியல் கைதிகளை விடுதலை செய்து உதவுமாறு நாம் மிகவும்  வினயமாக வேண்டி நிற்கின்றோம் என  மன்னார் இந்துக் குருமர் பேரவை ஜனாதிபதிக்கு அவசர கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை இலங்கை ஜனாதிபதிக்கு அவசர கடிதம் Reviewed by Author on March 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.