அண்மைய செய்திகள்

recent
-

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக முள்ளியவளையில் மாபெரும் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து குறித்த போராட்டம் இன்று காலை 10.15 மணிக்கு ஆரம்பமானது வன்னி மேம்பாட்டு பேரவையின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் சார்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டு இந்த அரசாங்கத்தை வெளியேறுமாறும் மக்களின் வாழ்வுக்கான அத்தியாவசிய பொருட்களின் விலையேத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

 முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று நகரத்தில் உள்ள ச தொ ச விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறைவடைந்தது குறித்த போராட்டத்தில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மற்றும் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முள்ளியவளை,மல்லாவி வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி சாரதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்


























பொருளாதார நெருக்கடிக்கு எதிராக முள்ளியவளையில் மாபெரும் போராட்டம் Reviewed by Author on April 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.