அண்மைய செய்திகள்

recent
-

மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய பெரிய மீன்கள்.

மீன்பிடி தடை காலம் முடிந்து பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். மீனவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு அதிகாலை(16) மீன்களுடன் கரை திரும்பினார்கள். இவ்வாறு மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால்; மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.

 மீன்பிடி தடையால் கடந்த 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் மீனவர்கள் தீவிரம் காட்டினர். இதனால் தெற்குவாடி துறைமுக கடற்கரை மீனவர்கள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது.













மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய பெரிய மீன்கள். Reviewed by Author on June 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.