அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வளைகுடா கடற்கரையில் தொடங்கியது கணவாய் மீன்கள் சீசன்

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்ற நிலையில் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் டியூப் கணவாய் மீன்கள் சிக்கியது. சைக்கிள் டியூப் போன்று இருப்பதால் இதை டியூப் கணவாய் என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.

 இது கனவாய் வகையில் ஒரு வகைப்படும். ஒரு அடி நீளம் வரையில் இருக்கும். இதற்கு ஊசி கணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த கணவாய் மீன்கள் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். தற்போது ஒரு கிலோ ரூ.200 முதல் ரூபாய் 250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகை கணவாய் மீன்கள் பெரிய வகை மீன்களிடம் இருந்து தப்பிக்க கருப்பு நிறத்தில் திரவம் போன்று வெளியிட்டு எதிரிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் தன்மையுடையது. உணவுக்காக மட்டும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.














மன்னார் வளைகுடா கடற்கரையில் தொடங்கியது கணவாய் மீன்கள் சீசன் Reviewed by Author on July 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.