பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை; சிக்கிய வர்த்தகர்
ஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்களைக் குறிவைத்து விற்பனை
மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#
இதன்போது விற்பனைக்கான போதை மாத்திரைகள் வர்த்தக நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் இடம் கண்டறியப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் , சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
March 24, 2026
Rating:


No comments:
Post a Comment