அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் நீண்ட நாள் பாவனையின்றி காணப்படும் கால்வாய்களை தூய்மைபடுத்தும் செயற்திட்டம் மன்னார் நகரசபை தலைவர் ஞானபிரகாசம் அன்ரனி டேவிட்சனின் தலைமையில் மன்னார் நகரசபை செயலாளரின் ஒழுங்கமைப்பில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றுவருகின்றது 

 குறித்த செயற்திட்டத்தின் முதல் கட்டமாக மன்னார் வலயகல்வி பணிமனை மற்றும் பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியில் நீண்ட காலமாக பயண்பாடு இன்றி காணப்பட்ட வாய்கால்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது மன்னார் நகரசபை ஊழியர்கள் இணைந்து குறித்த சுத்தப்படுத்தல் பணியை மேற்கொண்டுவருவதுடன் மன்னார் நகரசபை உறுப்பினர்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் குறித்த செயற்திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபையின் கீழ் பாவனையின்றி காணப்படும் வாய்கால்கள் தொடர்சியாக சுத்தப்படுத்தப்பட்டு மீள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றியமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது


மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு Reviewed by Author on August 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.