அண்மைய செய்திகள்

recent
-

மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் மீட்பு -ஒருவர் கைது

களுபோவில பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இனந்தெரியாத போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து 78,600 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 4800 போதை மாத்திரைகளுடன் மோதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் போது, ​​களுபோவில பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாற்பத்தேழு வயதுடைய தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் மீட்பு -ஒருவர் கைது Reviewed by Author on November 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.