அண்மைய செய்திகள்

recent
-

நானுஓயா விபத்து: ரதல்ல குறுக்குவழி வீதியில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகத் தடை

நானுஓயா விபத்தைத் தொடர்ந்து, நுவரெலியா, ரதல்ல குறுக்குவழி வீதியில் கனரக வாகனங்களின் நுழைவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை, நுவரெலியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் குழுவுடன் இணைந்து இன்று வீதியை மதிப்பீடு செய்யவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கனரக வாகனங்களை அனுமதிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நானுஓயா விபத்து: ரதல்ல குறுக்குவழி வீதியில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகத் தடை Reviewed by Author on January 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.