மன்னாரில் மீன்களின் விலை அதிகரிப்பு-மக்கள் விசனம்
மன்னாரில் கடல் மீன்களின் விலை கடந்த பல தினங்களாக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் பல கடற்கரைப்பகுதிகளிலும் மீன் பிடிக்கப்பட்டு வருகின்றது.நாளாந்தம் பல ஆயிரக்கணக்காண கிலோ மீன்கள் பிடிக்கப்படுகின்றது.தென்பகுதிக்கும் உடனுக்கடன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
எனினும் மன்னாரில் மீனின் விலை அதிகரித்துக்காணப்படுவதோடு தரமற்ற மீன்களும் சந்தையில் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மன்னார் மீனவர்களிடம் கேட்ட போது,
தற்போது அதிகளவான மீன் வகைகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதினால் மன்னாரில் மீன் வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நிருபர்
இது தொடர்பாக மன்னார் மீனவர்களிடம் கேட்ட போது,
தற்போது அதிகளவான மீன் வகைகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதினால் மன்னாரில் மீன் வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் மீன்களின் விலை அதிகரிப்பு-மக்கள் விசனம்
Reviewed by NEWMANNAR
on
January 30, 2010
Rating:
No comments:
Post a Comment