அண்மைய செய்திகள்

recent
-

உண்மைகளை அம்பலப்படுத்தும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆப்பு வைக்க திட்டம் தீட்டி வரும் அமைச்சர் ஒருவர்-


மன்னார் மாவட்டத்தில் இருந்து செயற்படும் பிராந்திய செய்தியாளர்கள் சிலரை திட்டமிட்டு அவர்களுடைய வேளைத்திட்டங்களை தடை செய்வதற்கும்  நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்துவதற்கும் அரசாங்கம் சார்ந்த அமைச்சர் ஒருவர் சத்தித்திட்டம் தீட்டி வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்த்தின் பிற்பாடு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்து எதிர் நோக்கிவரும் அவலங்கள்  தொடர்பாகவும் பத்திரிக்கைகளில் செய்திகளை வெளியிட்டு வரம் பிராந்திய ஊடகவியலாளாலர்கள் அடக்கப்பட்டம்,அச்சுருத்தப்பட்டும் வருகின்றனர்.

இதனிடையே காரியப்பெரும சகோதரர்களுக்குச் சொந்தமான சியத்தஇ.வெற்றி ஊடக வலையமைப்பின் சிங்கள சேவையில் பிரசித்தி பெற்ற கிஸ் எப்.எம். வானொலிச் சேவையின் அனைத்து முகாமைத்துவ நிர்வாக செயற்பாடுகளையும் நீலப்படையணி வசம் கொண்டுவருவதற்கு ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவருகிறது. 

இதனிடையே மன்னார் மாவட்டம் குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களை தன்வசம் இலுத்து தனக்குத் தேவையான செய்திகளை மட்டும் தனக்குச்சார்பாக வெளியிட அமைச்சர் பனித்த வருவதாக தெரிவிக்கப்படகின்றது.

எனினம் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர்கள் பலவிதமான வாக்குருதிகளை பல தடவை வழங்கியுள்ள போதும் இது வரை எதனையும்  செய்யவில்லை.

எனவே மன்னார் மாவட்ட உடகவியலாளர்கள் எந்த வித சலுகைகளுக்கும் விலை போகாத நிலையில் தன்மானத்துடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதனை எந்த அமைச்சாராக இருந்தாலும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். 

என தெரிவித்தார்.
உண்மைகளை அம்பலப்படுத்தும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆப்பு வைக்க திட்டம் தீட்டி வரும் அமைச்சர் ஒருவர்- Reviewed by NEWMANNAR on April 10, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.