அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளிமுனையில் இராணுவத்தினர் காவலரன் அமைக்கும் முயற்சி தோல்வி _

மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்படவிருந்த காலரன் ஒன்று ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து குறித்த காவலரன் அமைக்கும் வேளைத் திட்டத்தினை இராணுவத்தினர் கைவிட்டு அவ்விடத்திலிருந்து சென்று விட்டனர்.


மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கிற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய இராணுவத்தினர் மேற்படி இடத்தில் காவலரனை அமைக்க இராணுவத்தினர் திடீர் என நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.



இதனை அவதானித்த ஊர் மக்கள் தோவாலையத்தில் மணி எழுப்பிய பின் ஊர் மக்கள் அவ்விடத்தில் ஒன்று திரண்டு காவலரன் அமைக்க கடமையில் இருந்த இராணுவ சிப்பாயிகளுடன் முறன்பாட்டில் ஈடுபட்டனர்.

பின் இராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊர் மக்கள் இராணுவ அதிகாரிகளுடன் மேற்படி இடத்தில் காவலரன் அமைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

நீண்ட நேர வாக்கு வாதத்தின் பின் குறித்த இடத்தில் காவலரன் அமைக்கப்படமாட்டாது என இராணுவ அதிகாரி தெரிவித்தார். பின் அவ்விடத்தில் உள்ள பொருட்களை இராணுவத்தினர் எடுத்துச்சென்றனர்.
மன்னார் பள்ளிமுனையில் இராணுவத்தினர் காவலரன் அமைக்கும் முயற்சி தோல்வி _ Reviewed by NEWMANNAR on April 11, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.