மன்னாரில் இரவு நேரங்களில் மின்சாரத் தடை; மாணவர் பாதிப்பு
மன்னாரில் அண்மைக்காலமாக மின் விநியோகம் அடிக்கடி தடைப்படுவது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்பட்டு வருவதால் மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.
இரவு நேரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருத்த வேலைகள் என மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால்,தொடர்ந்தும் திருத்த வேலைதானா எனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
யுத்த சூழல் காலத்தில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரம் மின்சாரம் தடைப்படுவதால் வீதிகளில் மக்கள் நடமாடவும் அஞ்சுகின்றனர்.சில இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருத்த வேலைகள் என மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால்,தொடர்ந்தும் திருத்த வேலைதானா எனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
யுத்த சூழல் காலத்தில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரம் மின்சாரம் தடைப்படுவதால் வீதிகளில் மக்கள் நடமாடவும் அஞ்சுகின்றனர்.சில இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் இரவு நேரங்களில் மின்சாரத் தடை; மாணவர் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
June 22, 2011
Rating:

No comments:
Post a Comment