அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறையில் கடற்படை வீரர் தற்கொலை

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாமில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கடற்படை வீரர் ஒருவரின்; சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் பணித்தார்.


இச்சடலம் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டபோதே  மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் மேற்கண்டவாறு பணித்தார்.

தலையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதால் இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது. 
சிலாவத்துறையில் கடற்படை வீரர் தற்கொலை Reviewed by Admin on May 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.