மன்னாரில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் இடம்பெயர் மக்களைப் போன்று வாழ்ந்து வருகின்றனர்
மன்னாரில் மீள் குடியேற்றறப்பட்ட மக்கள், இடம்பெயர் மக்களைப் போன்று வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து, சொந்த இடங்களில் மீள் குடியேறிய போதிலும், இடம்பெயர் மக்களைப் போன்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் முகாம்களில் வாழ்ந்த அதே நிலைமையில் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படாமையே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் ஜீவனோபாய வழிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் இடம்பெயர் மக்களைப் போன்று வாழ்ந்து வருகின்றனர்
Reviewed by NEWMANNAR
on
May 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment