அண்மைய செய்திகள்

recent
-

பாஸ் நடைமுறை காணி சுவீகரிப்புக்கு எதிராக மன்னாரில் அடுத்த வாரம் உண்ணாவிரதம்!

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு போன்றவற்றிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்.

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடமுறை மற்றும்
மன்னார் மாவட்டத்தில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு போன்றவற்றிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் வாரங்களில் மன்னார் நகரில் மாபெரும் உண்ணாவிரதம் ஒன்றை நடாத்தவுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் சுதந்திரமான முறையில் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடற் படையினரால் பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி மன்னார் மாவட்டத்தில் அரச தரப்பு மற்றும் படை தரப்பு ஆகியோரினால் தமிழ் மக்களின் குடியேற்ற காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் மீள் குடியேற முடியாத நிலையில் காடுகளில் தஞ்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் தெரிவித்தார்.
இவைகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் வாரம் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
பாஸ் நடைமுறை காணி சுவீகரிப்புக்கு எதிராக மன்னாரில் அடுத்த வாரம் உண்ணாவிரதம்! Reviewed by NEWMANNAR on June 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.